Tamilnadu
தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் !
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும். அதேசமயத்தில் தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக்-டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
சாகச வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!