Tamilnadu
தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் !
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும். அதேசமயத்தில் தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக்-டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
சாகச வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!