Tamilnadu
தமிழகத்தில் கண்டிப்பாக டிக்-டாக் செயலி தடை செய்யப்படும் - அமைச்சர் மணிகண்டன் !
தமிழக சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாதம் நடைப்பெற்றது. அப்போது பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி தடை செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்து பேசிய தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன், டிக் டாக் உள்ளிட்ட எந்த ஒரு செயலியை நீக்குவதாக இருந்தாலும், அதை மத்திய அரசு தான் செய்ய முடியும். அதேசமயத்தில் தமிழகத்தில் சர்ச்சைக்குறிய டிக்-டாக் வீடியோக்களை கண்காணிக்க தனி அதிகாரி நியமித்துள்ளதாக தெரிவித்தார்.
சாகச வீடியோக்களை டிக்-டாக்கில் பதிவு செய்ய முயற்சித்து பல்வேறு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. எனவே கண்டிப்பாக தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!