Tamilnadu
தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான பி.இ / பி.டெக் ஆன்லைன் கலந்தாய்வு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கான இன்றைய கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 9,872 ரேங்க் வரை பெற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 ஆன்லைன் மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் ஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேர்க்கையை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.
ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஜூலை 28-ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
Also Read
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!