Tamilnadu
தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான பி.இ / பி.டெக் ஆன்லைன் கலந்தாய்வு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கான இன்றைய கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 9,872 ரேங்க் வரை பெற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 ஆன்லைன் மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் ஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேர்க்கையை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.
ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஜூலை 28-ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
Also Read
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!