Tamilnadu
தொடங்கியது பொதுப்பிரிவினருக்கான பி.இ / பி.டெக் ஆன்லைன் கலந்தாய்வு!
தமிழக பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு இன்று தொடங்கியது.
பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 25-ம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவு, தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடைபெற உள்ளது.
பொதுப்பிரிவினருக்கான இன்றைய கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 9,872 ரேங்க் வரை பெற்ற மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 ஆன்லைன் மையங்களுக்குச் சென்றோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 10-ம் தேதி வரை நடைபெறும் கலந்தாய்வு நிறைவடைந்ததும் ஜூலை 11-ம் தேதி மாணவர்களுக்கான சீட் ஒதுக்கீடு செய்யப்படும். கல்லூரிகளில் சேர்க்கையை மாணவர்கள் ஜூலை 12-ம் தேதிக்குள் உறுதிசெய்ய வேண்டும்.
ஜூலை 13-ம் தேதி இறுதி சீட் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் கல்லூரியைத் தேர்வு செய்யாத மாணவர்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஜூலை 28-ம் தேதி வரை பொறியியல் பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!