Tamilnadu

இயல்புநிலைக்குத் திரும்பிய வெப்பநிலை... மழைக்கு வாய்ப்புள்ளதா?

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பாக உள்ளதால் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பில்லை.

ஆனாலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், நெல்லை ஆகிய பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும். மழை பெய்ய வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடலுக்கு செல்லவேண்டாம் என மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.