Tamilnadu
பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்திலிருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் !
கோவை மாநகரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 ரக விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானமானது கோவை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இருகூர் பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென கழன்று விழுந்தது.
தரையில் விழுந்த பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், எரிந்த பெட்ரோல் டேங்க்கை அணைத்தனர். இதற்கிடையில் நிலைமையை சுதாரித்துக்கொண்ட விமானி, பயிற்சி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் சுமார் 3 அடி ஆழத்திற்கு நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும், தகவல் அறிந்த சூலூர் விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மிக்-21 ரக விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?
-
விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் பலி:முதலமைச்சர் இரங்கல் -அரசின் உதவி விரைந்து வழங்கப்படும் எனவும் உறுதி!
-
ஆபாச வீடியோ சர்ச்சை : “பிரஜ்வலை இந்தியா அழைத்து வர வேண்டும்...” - பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடிதம் !