Tamilnadu
பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக விமானத்திலிருந்து கழன்று விழுந்த பெட்ரோல் டேங்க் !
கோவை மாநகரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து மிக்-21 ரக விமானம் ஒன்று பயிற்சிக்காக புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானமானது கோவை விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இருகூர் பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த 1200 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூடுதல் பெட்ரோல் டேங்க் திடீரென கழன்று விழுந்தது.
தரையில் விழுந்த பெட்ரோல் டேங்க் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து சென்ற தீயணைப்புப் படையினர், எரிந்த பெட்ரோல் டேங்க்கை அணைத்தனர். இதற்கிடையில் நிலைமையை சுதாரித்துக்கொண்ட விமானி, பயிற்சி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார்.
இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் சுமார் 3 அடி ஆழத்திற்கு நிலத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். மேலும், தகவல் அறிந்த சூலூர் விமானப்படை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மிக்-21 ரக விமானம் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!