Tamilnadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வட தமிழகமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், காற்றின் திசை மாறினால் ஜூலை 11 முதல் 15 வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!