Tamilnadu
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல், தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தேனி, கோவை ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கும் வட தமிழகமான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வடக்கு நோக்கி நகர்வதால் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசாவில் மழைக்கு வாய்ப்பு என்றும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், காற்றின் திசை மாறினால் ஜூலை 11 முதல் 15 வரை சென்னையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரூ.210.17 கோடியில் அரசுப் பள்ளிகளுக்கான புதிய கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
150 க்கும் மேற்பட்ட குழுக்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள்.. இந்திய நாட்டிய விழா தொடக்கம்- எங்கு? விவரம்!
-
ஆட்டோ ஓட்டுநரின் கன்னத்தில் பளார்.. நடு ரோட்டில் அதிகார அத்துமீறலில் ஈடுபட்ட பாஜக MLA-மும்பையில் நடந்தது?
-
“வாக்குரிமை என்பது நம்முடைய கடமை மட்டுமல்ல; நம்முடைய உரிமை!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
“கீழடி - தமிழர்களின் தாய்மடி; பொருநை - தமிழர்களின் பெருமை!” : முரசொலி தலையங்கம்!