Tamilnadu
இன்று தொடங்கியது பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு!
பி.இ. மற்றும் பி.டெக் பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. உயர்கல்வித்துறையுடனான மோதலின் காரணமாக பொறியியல் கலந்தாய்வுக் குழுவின் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகினார். இதனால், இந்த ஆண்டு கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது.
பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்து சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதைத்தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கியுள்ளது.
பொறியியல் கல்வி பயில விரும்பும் சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று மாற்றுத்திறனாளிகளுக்கும், நாளை ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், 27-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. தொழிற்கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நாளை முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் விவரம் என்ன?” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி கேள்வி!
-
"மோடியின் அமைச்சரவையில் 39 % பேர் குற்றப்பின்னணி கொண்டவர்கள்" : அமித்ஷாவுக்கு ஆ.ராசா MP பதிலடி !
-
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்காக... இழப்பீடு தொகையை அதிகரித்த தமிழ்நாடு அரசு : முழு விவரம் உள்ளே !
-
ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 66 புதிய பள்ளிக் கட்டடங்கள் - 818 பேருக்கு பணி நியமனம் : முழு விவரம் உள்ளே!
-
மக்கள் நல்வாழ்வுத் துறையில் 644 பேருக்கு பணி நியமனம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!