Tamilnadu
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை... தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கடல் காற்று வீசத் தொடங்கியிருப்பதாலும் தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளைச் சேர்ந்த நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஸியஸும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஸியஸும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசைநோக்கி காற்று வீசுவதால், அனல்காற்று படிப்படியாக குறையும், அதேப்போல், காலை நேரத்தில் காற்றின் வேகம் சற்றி அதிகரித்தே காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
தமிழ் திரையுலகத்தில் நீங்கா துயரம்... பல தலைமுறைகளுக்கான சினிமா பல்கலைக்கழகம் கே.பாக்யராஜ் !
-
தமிழ்த்திரையுலகம் உள்ளவரை பாக்யராஜ் சாரின் புகழ் நிலைத்திருக்கும் : உதயநிதி ஸ்டாலின் இரங்கல்!
-
“ஒளிந்திருந்த பூனை வெளியே வந்துவிட்டது” : அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புக்கு அன்பில் மகேஷ் கண்டனம்!
-
“தமது படைப்புகளால் தொடர்ந்து வாழ்வார்” - ‘பாக்யராஜ் 50’ விழாவை குறிப்பிட்டு மு.க.ஸ்டாலின் உருக்கம்!
-
“மின் துறை வெள்ளை அறிக்கையா அது நொள்ளை அறிக்கை.. குற்றம் சொல்லி காலத்தை கடத்தாதீர்கள்” : முரசொலி காட்டம்!