Tamilnadu
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை... தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கடல் காற்று வீசத் தொடங்கியிருப்பதாலும் தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளைச் சேர்ந்த நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஸியஸும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஸியஸும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசைநோக்கி காற்று வீசுவதால், அனல்காற்று படிப்படியாக குறையும், அதேப்போல், காலை நேரத்தில் காற்றின் வேகம் சற்றி அதிகரித்தே காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
நீதித்துறையை விமர்சித்த சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு! : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
-
"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் மிக பெரிய வரலாறு இது" - அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் !
-
”அரசாங்கத்தின் மூலதனம் பொதுப்பணித்துறை” : அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
"கேள்வி கேட்பது தேசத்துரோகமாக கருதப்பட்டால் ஜனநாயகம் இருக்காது" - பாஜக அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
-
"ஆளுநர்கள் மசோதாக்கள் மீது தங்களது தனி விருப்பத்தை பயன்படுத்துகின்றனர்" - உச்சநீதிமன்றம் அதிருப்தி !