Tamilnadu
தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை... தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், கடல் காற்று வீசத் தொடங்கியிருப்பதாலும் தமிழகத்தில் சென்னை முதல் நெல்லை வரை உள்ள கடலோர மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளைச் சேர்ந்த நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 39 டிகிரி செல்ஸியஸும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்ஸியஸும் பதிவாகும் என கூறப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசைநோக்கி காற்று வீசுவதால், அனல்காற்று படிப்படியாக குறையும், அதேப்போல், காலை நேரத்தில் காற்றின் வேகம் சற்றி அதிகரித்தே காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!