Tamilnadu
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
அடுத்த 48 மணிநேரத்தில் வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் தென்மேற்கு பருவமழை வலுப்பெற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடலில் அண்மையில் உருவான வாயு புயலால் காற்றின் ஈரப்பதம் குறைந்ததாலேயே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசியது.
தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியால் தமிழகம் மற்றும் கேரளாவில் பருவமழை தீவிரமடையும் என கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களும், திண்டுக்கல், விருதுநகர், ஈரோடு, சேலம் போன்ற மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், வட தமிழக மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுச்சேரியில் வெப்பத்தின் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் தரமணி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பூந்தமல்லி, பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. 6 மாதங்களுக்குப் பிறகு தற்போது சென்னையில் மழை பெய்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !