Tamilnadu
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வட மேற்கு திசை காற்று வலுவாக வீசுவதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும். எனவே, அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!