Tamilnadu
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வட மேற்கு திசை காற்று வலுவாக வீசுவதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும். எனவே, அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
-
”மணிப்பூரில் ஓராண்டாக அமைதியைக் கொண்டுவர மறுத்து விட்ட பா.ஜ.க” : ப.சிதம்பரம்!
-
இன்றுடன் ஓராண்டாக நீடிக்கும் மணிப்பூர் வன்முறை : வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!