Tamilnadu
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கடும் வெப்பம் நிலவும் : வானிலை மையம் எச்சரிக்கை!
வட மேற்கு திசை காற்று வலுவாக வீசுவதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணமலை, விழுப்புரம், கடலூர், திருச்சி, பெரம்பலூர், மதுரை மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.
வெப்பநிலை இயல்பை விட 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்து காணப்படும். எனவே, அனல் காற்று வீச வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் காலை 11 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோல், சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
Also Read
-
மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கான நிதி வழங்குவதில் தாமதம் ஏன்? : ராஜாத்தி சல்மா MP கேள்வி!
-
“தமிழ்நாட்டில் உள்ள ITI-க்களை மேம்படுத்த ஒதுக்கிய நிதி விவரம் என்ன?” : தி.மு.க எம்.பி-க்கள் கேள்வி!
-
“அதிக பணவீக்கக் குறியீட்டில் 60வது இடத்தில் இந்தியா!” : நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி.க்கள் கண்டனம்!
-
“3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு - 41 புதிய ITI நிலையங்கள் ” : அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்!
-
அமெரிக்க பொருட்களுக்கு 0% வரி; இந்திய பொருட்களுக்கு 18% வரியா? - கனிமொழி MP கேள்வி!