Tamilnadu
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9.12 மீட்டராக இருந்த நீர்மட்டம் 13.77 மீட்டராக சரிந்துள்ளது.
இதனையடுத்து, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 9 அடி வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.
காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 6 அடிவரையிலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அதேப்போல், பிற மாவட்டங்களில் 3 அடிவரை குறைந்துள்ளது.
இந்நிலையில், நாகை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!