Tamilnadu
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9.12 மீட்டராக இருந்த நீர்மட்டம் 13.77 மீட்டராக சரிந்துள்ளது.
இதனையடுத்து, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 9 அடி வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.
காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 6 அடிவரையிலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அதேப்போல், பிற மாவட்டங்களில் 3 அடிவரை குறைந்துள்ளது.
இந்நிலையில், நாகை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வயிற்று வலியை தீர்க்கும் : கஞ்சா செடி வளர்த்து விற்பனை - தந்தை மகன் கைது!
-
”அடுத்தடுத்த அரிவாள் வெட்டு.. அச்சத்தில் மக்கள்.. தறிகெட்டுப் போன சட்டம் ஒழுங்கு” : முழு விவரம்!
-
நடிகர் அஜித்குமார் தாயார் காலமானார் : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
”சறுக்கலை சந்தித்த முதல்வர் விஜயின் டெல்லி பயணம்.. செய்தியாளர்களா.. பதறிய விஜய்” : முரசொலி தலையங்கம்!
-
ஆசிரியப் பெருமக்களைப் பாதுகாக்கும் பணியில் உடனே இறங்குங்கள்! வீரவசனம் வேண்டாம் : அன்பில் மகேஸ் பொய்யாமொழி