Tamilnadu
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்.. ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலத்தடி நீர்மட்டம் குறித்து மத்திய நீர்வளத்துறை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிகபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 9.12 மீட்டராக இருந்த நீர்மட்டம் 13.77 மீட்டராக சரிந்துள்ளது.
இதனையடுத்து, திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 9 அடி வரை நீர்மட்டம் சரிந்துள்ளது.
காஞ்சிபுரம், விருதுநகர், நாமக்கல், கிருஷ்ணகிரி, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 6 அடிவரையிலும் நீர்மட்டம் சரிவை சந்தித்துள்ளது. அதேப்போல், பிற மாவட்டங்களில் 3 அடிவரை குறைந்துள்ளது.
இந்நிலையில், நாகை, திருச்சி, ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் மட்டும் சற்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”தமிழ்நாட்டில் இந்த இருமல் மருந்தின் உரிமங்கள் முழுமையாக ரத்து” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி!
-
“‘சுயமரியாதை’ என்ற சொல்லே அனைவருக்கும் வேண்டிய சொல்! வெல்லும் சொல்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
தமிழ்நாடு எதற்கெல்லாம் போராடும்... ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி !
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!