Tamilnadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூன் 14) முதல் ஜூலை 14 வரை குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in / tnpsc.exams.net / tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
Also Read
-
"இளைஞர் அஜித்குமார் விவகாரத்தில் சாத்தான் வேதம் ஓதும் பழனிசாமி" : ஆர்.எஸ். பாரதி பதிலடி!
-
திமுக சார்பில் அஜித்குமார் தாயாரிடம் ரூ.5 லட்சம் நிதி வழங்கிய அமைச்சர்: வீட்டுமனை பட்டா - பணி நியமன ஆணை!
-
”ChatGPT-யை முழுமையாக நம்ப வேண்டாம்” : பயனர்களுக்கு OpenAI தலைவர் சாம் ஆல்ட்மன் எச்சரிக்கை!
-
மாற்றுத்திறனாளிகள் மாமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற விண்ணப்பிக்கலாம்! : முழு விவரம் உள்ளே!
-
”காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களை அலைக்கழிக்க கூடாது” : காவலர்களுக்கு ஏடிஜிபி அறிவுறுத்தல்!