Tamilnadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூன் 14) முதல் ஜூலை 14 வரை குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in / tnpsc.exams.net / tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
Also Read
-
”தமிழ்நாட்டை உலகின் விளையாட்டு மையமாக மாற்றி வருகிறோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
”தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் ஜப்பான் தரத்துக்கு இணையானது” : டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!
-
தமிழ்நாட்டு வீரர் அ.மஹாராஜனுக்கு ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
Dominant செய்யும் திவ்யாவை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்: Hotel டாஸ்கால் ஆஹா ஓஹோ என மாறிய BB வீடு!
-
“திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!