Tamilnadu
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6,491 பணியிடங்களுக்கு செப்டம்பர் 1-ம் தேதி குரூப்-4 தேர்வு நடைபெற உள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவியாளர், நில அளவையர், தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, பாடத்திட்டங்கள், விண்ணப்பக்கட்டணம் பற்றிய முழுமையான அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
குரூப் 4 தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று (ஜூன் 14) முதல் ஜூலை 14 வரை குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in / tnpsc.exams.net / tnpsc.exams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
Also Read
-
மதத்தை வைத்து பிரச்சாரம் செய்யும் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன் !
-
திக்கெட்டும் புகழ் பரப்பும் திராவிட நாயகர் : நாடும் ஏடும் போற்றும் 4 ஆம் ஆண்டு தொடக்கம்!
-
நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை : ராஜஸ்தானில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் !
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!