Tamilnadu
தமிழகத்தில் எப்போது வெயிலின் தாக்கம் குறையும்? - சென்னை வானிலை மையம் தகவல்!
தென்மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் தொடங்கியதை அடுத்து நேற்று தமிழகத்திலும் பருவமழை தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவமழை காரணமாக தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், ஓரிரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர். காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் அடுத்த 48 மணிநேரத்திற்கு அனல் காற்று வீசக்கூடும் என்றும், அதன் பிறகு தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!
-
ரேபிஸ் மரணங்களுக்கு தீர்வு என்ன? : மக்களவையில் ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பிய ஆ.ராசா MP!
-
“கர்நாடக அரசின் முயற்சியை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது” : அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்!
-
யோக்கியர் வேஷம் போடும் பழனிசாமி : அ.தி.மு.க ஆட்சி ஊழலை மீண்டும் நினைவூட்டும் முரசொலி!
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!