Tamilnadu
ஜல்லிக்கட்டு போராட்டம் போல், நீட் ரத்துக்காகவும் போராடுவோம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், தமிழகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்த மாணவிகளுக்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அவ்வகையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில், சென்னையில் உள்ள மயிலாப்பூரில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திய போராட்டக்காரர்கள், பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க அரசுகளுக்கு எதிராக முழக்கங்களையும் எழுப்பினர்.
பா.ஜ.கவின் மக்கள் விரோதத் திட்டங்களை எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஆமாம் சாமி போட்டு அனைத்தையும் நிறைவேற்றி வருவதையே மாநிலத்தில் உள்ள அ.தி.மு.க. அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது எனவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், ஜல்லிக்கட்டு நடத்த இளைஞர்கள் ஒன்றிணைந்து போராடியது போன்று, நீட் ரத்துக்காகவும் போராட்டம் நடத்த அஞ்சமாட்டோம் எனவும் எச்சரித்துள்ளனர்.
Also Read
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2026-ல் திமுகவின் வெற்றிக் கணக்கு இங்கிருந்து தொடங்குவோம் : முப்பெரும் விழா - செந்தில்பாலாஜி வரவேற்புரை!