Tamilnadu
"சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் அரசே கட்டணக் கொள்ளை" - மருத்துவர்கள் குற்றச்சாட்டு
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளை விடவும் அண்ணாமலை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அதிகபட்ச கல்வி கட்டணத்தை நிர்ணயித்து அரசே கட்டண கொள்ளை நடத்தி வருகிறது.
இதனை எதிர்த்து மாணவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. எனவே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தோடு இணைந்து மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்." என்றார்.
மேலும் "மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடவசதியை ஏற்படுத்தாமல் 10 சதவீத இடஒதுக்கீடு பொதுப்பிரிவினருக்கு மருத்துவ இடஒதுக்கீடு அளிக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறி இருப்பது ஏற்கத்தக்கதல்ல. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசு தனியாக மாநில பாடத்திட்டத்தில் தனி தேர்வு நடத்த வேண்டும்", என்றார்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!