Tamilnadu
இனி தியேட்டர்களில் 24 மணிநேரமும் படங்கள் திரையிடலாம்: தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பாணை இன்று அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 24 மணிநேரமும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து மல்டிப்ளக்ஸ் மற்றும் சிறிய தியேட்டர்களுக்கும் பொருந்தும் என தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடைகள், தியேட்டர்களை செயல்பட அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!