Tamilnadu
இனி தியேட்டர்களில் 24 மணிநேரமும் படங்கள் திரையிடலாம்: தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பாணை இன்று அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 24 மணிநேரமும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து மல்டிப்ளக்ஸ் மற்றும் சிறிய தியேட்டர்களுக்கும் பொருந்தும் என தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடைகள், தியேட்டர்களை செயல்பட அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் : தலையிட்டு தீர்வு காணவேண்டும்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
“பாசிச சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற இளைஞர் அணி எப்போதும் தயார்” : துணை முதலமைச்சர் உதயநிதி !
-
கன்னியாகுமரி to சென்னை.. 6 நாட்கள் மகளிர் விடியல் பேருந்துகளில் பயணம்... பிரமிக்க வைத்த 2 பெண்கள்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு ஜீரோ சொன்ன பாஜகவுக்கு தேர்தலில் ஜீரோதான் கிடைக்கும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
6வது முறையாக U19 உலகக்கோப்பையை வென்ற இந்தியா! ஒரே தொடரில் சாதனை மேல் சாதனை! - முழுவிவரம் உள்ளே