Tamilnadu
இனி தியேட்டர்களில் 24 மணிநேரமும் படங்கள் திரையிடலாம்: தமிழக அரசு அனுமதி
தமிழகத்தில் 24 மணிநேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் இயங்கலாம் என தமிழக அரசு நேற்று அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பாணை இன்று அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், 24 மணிநேரமும், தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவு அனைத்து மல்டிப்ளக்ஸ் மற்றும் சிறிய தியேட்டர்களுக்கும் பொருந்தும் என தொழில் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் சுனில் பாலிவால் தெரிவித்துள்ளார்.
மேலும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடைகள், தியேட்டர்களை செயல்பட அனுமதி அளிப்பது குறித்து காவல்துறை முடிவெடுக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”
-
”இந்தியப் பொருளாதாரத்தில் மந்தநிலை.. ஐ.நா.வின் கணிப்பு.. பொய் கூறுகிறாரா பிரதமர்?” - முரசொலி தலையங்கம்!