Tamilnadu
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!
புதுச்சேரி சபாநாயகராக பணியாற்றி வந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதனால் அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். பின்னர் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன் துணை சபாநாயராக இருந்த சிவக்கொழுந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
திராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!