Tamilnadu
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!
புதுச்சேரி சபாநாயகராக பணியாற்றி வந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதனால் அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். பின்னர் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன் துணை சபாநாயராக இருந்த சிவக்கொழுந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
திராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.
Also Read
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!