Tamilnadu
புதுச்சேரி சட்டப்பேரவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!
புதுச்சேரி சபாநாயகராக பணியாற்றி வந்த வைத்திலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அதனால் அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டப்படுவதாக சட்டசபை செயலர் வின்சென்ட் ராயர் நேற்று அறிவித்தார். பின்னர் புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து சபாநாயகர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன் துணை சபாநாயராக இருந்த சிவக்கொழுந்து புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.
திராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் சிவக்கொழுந்து ஒருமனதாக சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார். நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சிவக்கொழுந்து பதவி ஏற்கிறார்.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!