Tamilnadu
8 வழிச்சாலை அமைக்க அதிமுக அரசு துடித்தால் மக்கள் பாடம் புகட்டுவர் - விவசாயிகள் எச்சரிக்கை!
சென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து பாஜக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதற்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசுன் துணைபோகின்றது
எனவே, எட்டு வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி துடித்தால், மக்களவைத் தேர்தலில் எப்படி அவர்களுக்கு பாடம் புகட்டப்பட்டதோ அதேபோல், சட்டமன்றத் தேர்தலிலும் பாடம் கற்பிக்கப்படும் என விவசாயிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
மேலும், விவசாயத்தையும், விவசாயிகளையும் அழித்து மக்களுக்கு எதிரான எட்டு வழிச்சாலையை நிறைவேற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் விவசாயிகளுக்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்பு, பொதுமக்களும், விவசாயிகளும் தான் முக்கியம். நானும் ஒரு விவசாயிதான். விவசாயத்தை அழிக்கும் வகையிலான எந்த திட்டத்தையும் நிறைவேற்ற மாட்டோம் என மேடைக்கு மேடை பேசிய எடப்பாடி பழனிசாமியின் உண்மையான முகம் தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்
இதனையடுத்து, எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிற ஜூன் 4ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலிவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!
-
டிட்வா புயல்: “அடிப்படை வசதிகளையும் தேவைப்படும் காலம் வரை நமது அரசு வழங்கும்” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
Re-entry கொடுத்த ஆதிரை: BB வீட்டிற்குள் யார் best ஆண்களா? பெண்களா? போட்டி போட்டு விளையாடும் housemates!
-
திருக்கார்த்திகை தீபத்திருவிழா : பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு!