Tamilnadu
ராகுல் தலைவராக நீடிக்க வேண்டி பேரணி நடத்திய தமிழக காங்கிரஸார் மீது வழக்குப்பதிவு
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. பா.ஜ.க எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சிகள் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுத் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிட்ட 9 இடங்களிலும் அமோக வெற்றிபெற்றுள்ளது.
இந்நிலையில், மோசமான இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி தனது அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என அரசியல் வட்டாரங்கள் பரபரத்தன.
அவர் பதவியை தொடரவேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ராகுல் தொடர்ந்து தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காங்கிரஸ் கட்சி சென்னை அண்ணா சாலையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியர் உத்தரவுக்கு கீழ்படியாமை ஆகிய 2 பிரிவுகளின் கீழ்,பேரணியில் பங்கேற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட 700 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Also Read
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!