Tamilnadu
நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார் எச்.வசந்த்குமார்!
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எச்.வசந்தகுமார்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதால், தான் ஏற்கெனவே வகித்து வந்த நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அதன்படி இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
இதனையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் 234 உறுப்பினர்கள் இருந்த நிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட உள்ளதால் பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 233 ஆக குறைகிறது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.வசந்த்குமார், 8 ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எனக்கு நாங்குநேரி தொகுதி மக்கள் நல்ல ஆதரவை அளித்தனர். நாங்குநேரி தொகுதிக்கான நலத்திட்டங்களை 5 ஆண்டுகளுக்கும் அமல்படுத்த வேண்டியதை நடப்பு ஆட்சியில் 3 ஆண்டுகளில் செய்து முடித்திருப்பதாகவும் கூறினார்.
மேலும், எங்களை வழிநடத்த ராகுல்காந்தியால் மட்டுமே முடியும். அவர்தான் காங்கிரஸின் தலைவராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!