Tamilnadu
நாடுமுழுவதும் வந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கவில்லை - வைரமுத்து சூசகம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 37 மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 38 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரிலும் தொலைப்பேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, தமிழக மக்கள் கொண்டாட வேண்டிய ஒன்று. இது திராவிட சித்தாந்ததுக்கான வெற்றி" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் சுனாமி அலை பாய்ந்திருக்கிறது. ஆனால் அந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறது என தெரிவித்தார். அதாவது மோடியின் அலை தமிழகத்தில் எடுபடாது என்று சூசகமாக பேசியிருக்கிறார். தி.மு.கவின் வெற்றி வியப்புக்குரியது என்றும், பா.ஜ.கவின் வெற்றி திகைப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
Also Read
-
கூட்டாட்சியின் குரலை நெரிக்கும் தொகுதி மறுவரையறை : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி எதிர்ப்பு!
-
விஜய் தமிழ்நாட்டு மக்களுக்காக எந்த போராட்டக் களம் வந்துள்ளார்? : நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி!
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய பாஜக அரசு செவிசாய்த்தே ஆக வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
”குறையும் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம்.. பாகுபாடு காட்டும் பாஜக” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
கருப்புக்கொடி போராட்டம் டிரெயிலர்தான் மெயின் பிக்சரை பார்க்க ஆசைப்பட கூடாது - CM MK Stalin எச்சரிக்கை!