Tamilnadu
நாடுமுழுவதும் வந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கவில்லை - வைரமுத்து சூசகம்!
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 37 மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதி என 38 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் நேரிலும் தொலைப்பேசியிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது வாழ்த்தினை தெரிவித்தார் கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி, தமிழக மக்கள் கொண்டாட வேண்டிய ஒன்று. இது திராவிட சித்தாந்ததுக்கான வெற்றி" என்று கூறினார்.
மேலும் பேசிய அவர், இந்தியா முழுவதும் சுனாமி அலை பாய்ந்திருக்கிறது. ஆனால் அந்த சுனாமியில் தமிழகம் மட்டும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கிறது என தெரிவித்தார். அதாவது மோடியின் அலை தமிழகத்தில் எடுபடாது என்று சூசகமாக பேசியிருக்கிறார். தி.மு.கவின் வெற்றி வியப்புக்குரியது என்றும், பா.ஜ.கவின் வெற்றி திகைப்புக்குரியது என்றும் அவர் கூறினார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!