Tamilnadu
தலித் மக்களின் மாடுகளை அரிவாளால் வெட்டிய வன்முறை கும்பல்!
காரைக்கால் மாவட்டம் வடமட்டம் என்ற கிராமத்தில், தேவா என்பவருக்கு சொந்தமான வயலில் அதே பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் குடியிருப்பு பகுதியில் வசிப்போரின் மாடுகள் மேய்ந்துள்ளன.
இதனால், ஆத்திரமடைந்த வயலின் உரிமையாளர், நள்ளிரவு சமயத்தில் தனது அடியாட்களுடன் சென்று, தலித் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள அனைத்து கால்நடைகளையும் சரமாரியாக வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக கேள்வி கேட்க வந்த அப்பகுதி மக்களையும் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். எனவே, கோட்டுச்சேரி போலீசாரிடம் வடமட்டம் கிராம மக்கள் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் வேதனைக்குள்ளாகினர்.
இந்நிலையில், வயல் உரிமையாளர் தேவா நடத்திய வன்முறை வெறி ஆட்டத்தினால் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளன. மேலும், சில மாடுகளை காணவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
Also Read
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!
-
“ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் பெறக்கூடாது என்பது கொடூரமான சர்வாதிகார மனோபாவம்!” : முரசொலி தலையங்கம்!
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!