Tamilnadu
மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது!
மீட்பர் ஞாயிறான கடந்த ஏப்., 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் தமிழகத்தில் உள்ள பிரதான போக்குவரத்துத் தளங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விமான நிலையத்தைச் சுற்றி தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரசேகரன், பாஸ்கரன் என்ற இருவர் தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசாரித்தால் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடக்கும் என மதுரை விமான நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து பெருங்குடி போலீசாரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி புகார் கூறியுள்ளார். இதனை விசாரித்த போலீசார் மிரட்டல் விடுத்த இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!