Tamilnadu
மதுரை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இருவர் கைது!
மீட்பர் ஞாயிறான கடந்த ஏப்., 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலின் எதிரொலியாக இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையால் தமிழகத்தில் உள்ள பிரதான போக்குவரத்துத் தளங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
முக்கியமாக மதுரை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் விமான நிலையத்தைச் சுற்றி தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சந்திரசேகரன், பாஸ்கரன் என்ற இருவர் தங்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் குறித்து விசாரித்தால் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நடக்கும் என மதுரை விமான நிலையத்துக்கு மிரட்டல் கடிதம் ஒன்று எழுதியுள்ளனர்.
இந்த மிரட்டல் கடிதம் குறித்து பெருங்குடி போலீசாரிடம் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி புகார் கூறியுள்ளார். இதனை விசாரித்த போலீசார் மிரட்டல் விடுத்த இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
ரூ.265.50 கோடி : 9371 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
டித்வா புயலால் பாதித்த இலங்கை : 950 மெட்ரிக் டன் நிவாரண பொருட்களை அனுப்பிவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!