Tamilnadu
TET தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தம் - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பள்ளிகளில் பணியாற்றி வரும் 1,500 ஆசிரியர்களுக்கு சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறவேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் 2012-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.
தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறாத ஆசிரியர்களுக்கு மேலும் 4 ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்படி, தேர்ச்சி பெறாதவர்கள் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குப் பிறகு பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேருக்கு தற்போது அதிரடியாக சம்பள நிறுத்தம் செய்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
Also Read
-
“இரண்டு கதாபாத்திரமும் ஒன்றுதான்” : மோடியை மறைமுகமாக விமர்சித்த சுப்ரியா ஸ்ரீனேட் !
-
சாலையில் நடந்து சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை : உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!
-
வாக்குப்பதிவு சதவீதத்தில் தொடர் குளறுபடி - திடீரென்று உயர்ந்த 1 கோடி வாக்குகள்: மோடி அரசு செய்த சதி என்ன?
-
”பா.ஜ.கவின் இந்துத்வா கொள்கை வீட்டையே தீ வைத்து எரித்து விடும்” : உத்தவ் தாக்கரே கடும் சாடல்!
-
கெஜரிவால் நன்மதிப்பைச் சீர்குலைக்க - பிணம் தின்னும் வட இந்திய ஊடக தர்மங்கள் : சிலந்தி!