Tamilnadu
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிஐ விசாரணையை தொடங்கியது!
பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் மற்றும் மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. எனினும், சிபிஐ விசாரணையை தொடங்கவில்லை.
இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடூரச் சம்பவம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கக் கோரி பொன்னேரியை சேர்ந்த எஸ்.வாசுகி என்ற வழக்கறிஞர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு பதிலளித்து சி.பி.சி.ஐ.டி., பெண் எஸ்.பி. தாக்கல் செய்த மனுவில், வழக்குகள் விசாரணையை எடுத்துக் கொள்வது குறித்து சிபிஐ தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.இந்த நிலையில், சிபிஐ இவ்விவகாரத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை இன்று தொடங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கையும் சிபிஐ விசாரிக்க உள்ளது.
Also Read
-
“கலைஞரை பற்றிப் பேச பழனிசாமிக்கு எந்த யோக்கியதையும் கிடையாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
-
“ஆணவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி” : தேர்தல் பரப்புரையில் கனிமொழி விமர்சனம்!
-
தமிழ்நாடெங்கும் ஹிட்: ”ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்" இணையத்தில் வைரல்!
-
51-ஆ அல்லது 52-ஆ? : சொந்த வயதைக் கூட சரியாகக் குறிப்பிடாத விஜய்!
-
2026 தேர்தல் : திமுக கூட்டணியில் களமிறங்கும் 28 பேர்.. காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விவரம் உள்ளே!