Tamilnadu
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்: வேட்பு மனுத்தாக்கல் செய்தார் திமுக வேட்பாளர் சரவணன்
தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதி மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது.
இதனையடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் தேதி காலியாக உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூரில் வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆகையால், அனைத்து தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் மே 23ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.
இந்நிலையில் 4 தொகுதிகளில் போட்டியிட உள்ள திமுகவின் வேட்பாளர்களையும், தேர்தல் பொறுப்பாளர்களையும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
அதேபோல், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கா கழக வேட்பாளர் மருத்துவர் சரவணனன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்
Also Read
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!