Tamilnadu
பொறியியல் கலந்தாய்வு அறிவிப்பு எப்போது? - மாணவர்கள் கடும் அதிருப்தி!
+2 தேர்வு முடிவுகள் நேற்று வெளிவந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு குறித்து எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியாகாததால் மாணவர்களும், பெற்றோரும் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.
வழக்கமாக, +2 தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கான பணிகள் துவங்கிவிடும். ஆனால், இந்த ஆண்டு அரசு மற்றும் உயர்கல்வித்துறையில் நிலவும் குழப்பங்கள் காரணமாக கலந்தாய்வை நடத்துவது யார் என்பதே இன்னும் தெளிவாகாமல் இருந்து வருகிறது.
அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கமிட்டி தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா விலகியதையடுத்து, கலந்தாய்வுக்கான பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
வேலைவாய்ப்பின்மை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகள் மேல் மாணவர்களுக்கு இருக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. இந்நிலையில், அரசும், உயர்கல்வித்துறையும் மாணவர்களின் உயர்கல்வி விஷயத்தில் மெத்தனமாக நடந்துகொள்வது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.
Also Read
-
அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறை.. எல்லை மீறும் கர்நாடகாவுக்கு குவியும் கண்டனம்!
-
திமுக வழக்கறிஞர் அணி கூட்டம் : நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள் என்ன? - விவரம் உள்ளே!
-
மாத கணக்கில் அறுந்து கிடந்த மின் ஒயர்.. மின்வாரியத்தின் அலட்சியத்தால் பறிபோன உயிர்.. காஞ்சியில் சோகம்!
-
“கழகத்தின் முதுகெலும்பு சட்டத்துறை.. பாசிச தவெக.. அமைச்சர்களைக் கூட தெரியாத முதல்வர்” : உதயநிதி பேச்சு!
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!