Tamilnadu
கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கம் !
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் கோடை விடுமுறை காலத்தில் பொதுமக்கள் சுற்றுலா மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது.
சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா தலங்களுக்கு 150 சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் விடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 30-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
மெரினா கடற்கரை, அண்ணாசதுக்கம் செல்வதற்கு 50 பேருந்துகளும், கோவளத்திற்கு 3 பேருந்துகளும், வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு 21பேருந்துகளும், மாம்மல்லபுரம்- 7 பேருந்துகளும் விடப்பட்டுள்ளது.
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலுக்கு 8, திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலுக்கு -8, சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு 3 சிறப்பு பஸ்கள் வீதம் விடுமுறை நாட்களில் விடப்படுகின்றன.
இந்த சிறப்பு பஸ்கள் 21 ஜி, 27 எல், 25 ஜி, 11 எச், 12 ஜி, 45 பி, 102, 13, 6டி, 2ஏ, 27பி, 22 பி, 27எச், 40ஏ, 29ஏ, 500, 517, பி18, ஜி18, ஈ18, 70வி, 99, வி51, 517கட், 109கட், 515, 588, 514, 547, 580, 159, 50, 72சி, 29இ, 59 ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.
Also Read
-
தவெக ஆட்சியில் மின்சாரத்துறையின் அவலம் - பேரவையில் புட்டுப்புட்டு வைத்த செந்தில் பாலாஜி!
-
“உங்கள் பூச்சாண்டி வேலைகள் எல்லாம் தி.மு.க.விடம் பலிக்காது” : அமைச்சர் ரமேஷிற்கு சேகர் பாபு பதிலடி!
-
சாணியைக் கரைத்துத் தலையில் ஊற்றிக்கொண்டிருக்கிறது தவெக அரசு : கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் விமர்சனம்!
-
தவெக அரசு அறிவித்த குறுவை சிறப்புத்தொகுப்பு விவசாயிகளை சென்றடையவில்லை! : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
அந்த 3 கோப்புகளையும் திறந்து பாருங்கள் : பேரவையில் முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் Open Challenge!