Tamilnadu

தேர்தலை முன்னிட்டு நாளை திரையரங்க காட்சிகள் ரத்து !

தமிழகத்தில் நாளை மக்களவை மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், இன்று இரவுக்குள் தேர்தல் பணிகளை முழுவதுமாக முடிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாளை திரையரங்குகளில் பகல்நேர காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்கு உரிமையாளர் சங்க செயலாளர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.