Sports
தங்கப்பதக்கம் வென்றார் அல்ஜிரிய வீராங்கனை இமானே கெலிஃப் : பாலின சர்ச்சையில் சிக்கியும் சாதித்து அசத்தல் !
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டைப் போட்டியின் ரவுண்ட ஆப் 16 சுற்று போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஏஞ்சலா கரினி, அல்ஜீரியாவைச் சேர்ந்த இமானே கெலிஃப் ஆகியோர் மோதினர். இந்த போட்டியின் 46வது நொடியிலேயே இமானே கெலிஃப்பின் தாக்குதலால் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இரத்தம் வழிந்தது. இதனால் ஏஞ்சலா கரினி போட்டியை பாதியிலேயே நிறுத்தினார்.
மேலும் இமானே கெலிஃப் பெண்ணல்ல ஆண் என்றும், ஆண்தன்மை கொண்ட வலிமைமிக்க அவருடன் போட்டிப் போட முடியாது என்றும் பேட்டியளிக்க அவரின் குற்றச்சாட்டு இணையத்தில் வைரலானது. கடந்த 2023ம் ஆண்டு நடந்த உலக சாம்பியன்ஷிப் தொடரில் இமானே கெலிஃப் உடம்பில் ஆண்தன்மை அதிகமிருப்பதாக கூறி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் ஒலிம்பிக் தொடருக்கு முன்னதாக மருத்துவப்பரிசோதனை இமானே கெலிஃப்க்கு சாதகமாக வர, அவர் இந்த தொடரில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தற்போது அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். சமூக வலைத்தளத்தில் பலரும் இமானே கெலிஃப்பை மோசமாக விமர்சித்தனர். எனினும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஒலிம்பிக் கமிட்டி இமானே கெலிஃப்புக்கு ஆதரவாக ஆதாரங்களுடன் கருத்து தெரிவித்த நிலையில், அவர் மீதான விமர்சனம் குறைந்தது.
அவருக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்த ஏஞ்சலா கரினியும் தனது கருத்துக்கு மன்னிப்பு கோரி மீண்டும் அவரை சந்தித்தால் இமானே கெலிஃப்பை கட்டி தழுவுவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், இமானே கெலிஃப் ஒலிம்பிக் தொடரில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை யாங்க் லியூசை இமானே கெலிஃப் சந்தித்தார். இதில் சிறப்பாக செயல்பட இமானே கெலிஃப் யாங்க் லியூசை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இந்த போட்டிக்கு முன்னதாக பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் தற்போது தங்கப்பதக்கத்தை வென்று தன்னை விமர்சித்த அனைவர்க்கும் பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த வெற்றியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !
-
5 நாட்கள் சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... நிர்வாகம் அறிவிப்பு : விவரம் உள்ளே !
-
தங்கம், வெள்ளி விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது? - தினசரி விலை மாற்றம் ஏன்? : முழுவிவரம் உள்ளே!
-
'பெரியார் உலகம்' பணிக்காக திமுக ரூ.1.70 கோடி நிதி : கி.வீரமணியிடம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உலகப் புத்தொழில் மாநாடு - 2025 மகத்தான வெற்றி : ரூ.127 கோடி முதலீடுகள் ஈர்ப்பு!