Sports
"உங்களால் பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள்" - BCCI-க்கு ஷர்துல் தாகூர் எச்சரிக்கை !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ரஞ்சி கோப்பை போட்டிக்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து வருவதாகவும் விமரிசனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், பிசிசிஐ-யின் முடிவால் நாட்டில் உள்ள பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள் என இந்திய அணி வீரர் ஷர்துல் தாகூர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ரஞ்சிக் கோப்பையில் நான் விளையாடத் துவங்கிய போது முதல் 3 போட்டிக்கு 3 நாட்கள் இடைவெளி இருக்கும். அதே போல சில போட்டிகளுக்கு 4 நாட்கள் இடைவெளியும் இருக்கும்.
தொடர்ந்து நாக் அவுட் போட்டிகளுக்கு 5 நாட்கள் இடைவெளி இருக்கும். ஆனால், இப்போது அந்த இடைவெளி குறைந்துகொண்டே வருகிறது. ஒவ்வொரு போட்டியும் 3 நாட்கள் இடைவெளியில் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி வரை செல்லும் அணி இப்படி 3 நாட்கள் இடைவெளியில் 10 போட்டியில் விளையாடுவது என்பது மிகவும் கடினமான காரியம்.
இப்படி தொடர்ந்து போட்டிகள் வருவதால் எங்கள் அணியில் கூட வீரர்கள் காயமடைந்துள்ளனர். எனவே அடுத்த வருடம் அதிக இடைவெளி இருக்கும் அளவுக்கு அட்டவணையை பிசிசிஐ வடிவமைக்க வேண்டும். நம்முடைய வீரர்கள் இப்படி தொடர்ந்து ஓரிரு வருடங்கள் இடைவெளியின்றி விளையாடினால் பெரும்பாலான உள்ளூர் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!