Sports
மூத்த வீரர்களுக்கு ஓய்வு.. மீண்டும் சிதைந்த நடுவரிசை.. இந்திய அணியை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி !
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள். டி20 தொடரில் பங்கேற்க அந்த நாட்டுக்கு சென்றுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது திடீரென பெய்த மழை காரணமாக அந்த போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியா அணியை தலைமை தாங்கினார்.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவை பேட்டிங் செய்ய சொல்ல இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் இஷான் கிஷன், கில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, இஷான் கிஷான் 55 ரன்களுக்கும், சுப்மன் கில் 34 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
ஆனால், இந்திய நடுவரிசை வீரர்கள் கடுமையாக சொதப்பியதால் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி தொடக்கத்தில் தடுமாறினாலும், அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் (63 )மற்றும் கார்ட்டி (48 ) ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1க்கு 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
Also Read
-
வக்பு சட்டத்திருத்தம் : “முழுமையான தடைக்கு அடுத்த கட்ட சட்டப் போராட்டங்கள் அவசியம் ஆகிறது” - முரசொலி!
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!