Sports
பல மடங்கு அதிகரித்த IPL-ன் மதிப்பு.. முதலிடத்தில் CSK.. RCB, MI அணிகளில் மொத்த மதிப்பு என்ன தெரியுமா ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையான கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக வலம்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாக அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்ட நிலையில், அது தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 1,3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கியின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாகவும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1606 கோடியாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1564 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1490 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
‘இண்டிகோ’ விமானங்கள் ரத்து செய்வதற்கு காரணம் என்ன? : உண்மையை எடுத்துச் சொல்லும் முரசொலி தலையங்கம்!
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!