Sports
பல மடங்கு அதிகரித்த IPL-ன் மதிப்பு.. முதலிடத்தில் CSK.. RCB, MI அணிகளில் மொத்த மதிப்பு என்ன தெரியுமா ?
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளங்கி வருகின்றன. அதே போல இந்த இரு அணிகளுக்கும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. இந்த அணிகள் சொந்த மைதானத்தில் விளையாடும்போது அரங்கமே அந்த அணிகளின் வண்ணங்களால் நிறைந்து இருக்கும்.
ஆனால், இந்த இரு அணிகளை ஒப்பிட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கே அதிக ரசிகர்கள் இருப்பது தெரியவரும். சென்னை அணி சொந்த மைதானத்தில் விளையாடினாலும் அடுத்த மைதானத்தில் விளையாடினாலும் மைதானம் மஞ்சள் நிறத்தால் நிறைந்திருக்கும். கடந்த மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையான கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், ஐபிஎல் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக வலம்வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாக அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் மதிப்பு கடந்த 2020ம் ஆண்டில் ரூ.51062 கோடியாக கணக்கிடப்பட்ட நிலையில், அது தற்போது இரண்டு மடங்கு அதிகரித்து 1,3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக ஹூலைஹன் லோக்கே முதலீட்டு வங்கியின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மொத்த மதிப்பு 1760 கோடியாகவும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1606 கோடியாகவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1564 கோடியாகவும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மொத்த மதிப்பு ரூ.1490 கோடியாகவும் அதிகரித்துள்ளதாக அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!