Sports
ஆஸ். வீரர்களே.. தோனியை பார்த்து கற்றுக்கொள்ளுங்க: 12 ஆண்டுகளுக்கு பிறகு புகழும் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
டெஸ்ட் அரங்கில் பழமையானதும், மதிப்புமிக்கதுமான ஆஷஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்ற நிலையில், ஆஷிஷ் தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களும், இங்கிலாந்து அணி 325 ரன்களும் குவித்தது.
பின்னர் தனது இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 279 ரன்களுக்கு ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி வெற்றிபெற 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இங்கிலாந்து அணி 327 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தொடரில் ஜானி பேர்ஸ்டோ ஆட்டமிழந்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 4-வது இன்னிங்சின் முக்கிய கட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் க்ரீன் பந்து வீசினார். அந்த ஓவரின் இறுதிப்பந்தை பேர்ஸ்ட்டோ அடிக்காமல் விட்ட நிலையில்,பந்து கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் சென்றது, உடனே ஓவர் முடிந்துவிட்டதாக கருதிய பேர்ஸ்ட்டோ க்ரீஸை விட்டு வெளியே வந்தார். அந்த நேரத்தில் அலெக்ஸ் கேரி சமயோஜிதமாக பந்தை ஸ்டம்பில் வீச ரன் அவுட்க்கு அப்பீல் செய்யப்பட்டது.
முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்ற நிலையில், ஐசிசி விதிமுறையின்படி மூன்றாம் நடுவர் அவுட் என தீர்ப்பு வழங்கினார். இந்த விக்கெட் கிரிக்கெட் அரங்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ரசிகர்கள், 'Same Old Aussie' என மைதானத்திலேயே கூச்சலிட்டனர். அதோடு இங்கிலாந்து ஊடகங்களும் இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி மீது கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், 12 வருடங்களுக்கு முன்பு இதே போன்ற விவகாரத்தில் தோனி செய்த ஒரு செயலை தற்போது நினைவுகூர்ந்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்திய அணி கடந்த 2011 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த போது நடந்த டெஸ்ட் போட்டியில் இயான் மோர்கன் அடித்த பந்து எல்லை கோட்டிற்கு அருகே செல்ல அதை பிரவீன் குமார் தடுத்தார். தொடர்ந்து அந்த பந்தை பீல்டருக்கு வீசினர். இதற்கு இடையே இடைவேளை என நினைத்து இங்கிலாந்து வீரர் பெல் எல்லை கோட்டில் இருந்து வெளியேற அவரை இந்திய வீரர்கள் ரன் அவுட் செய்தனர்.
இது சர்ச்சையான நிலையில், இப்படி எடுக்கும் விக்கெட் தேவையில்லை என இந்திய அணி செய்த அப்பீலை கேப்டன் என்ற முறையில் தோனி திரும்பப்பெற்றார். அதன்பின்னர் பெல் களமிறங்கினார். இந்த செயலை குறிப்பிட்டு தோனியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read
-
“வெல்லும் தமிழ்ப் பெண்களே... திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான்!” : முதலமைச்சர் எழுச்சி உரை!
-
2026-ல் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்படும் விளையாட்டு போட்டிகள்! : துணை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
-
சிறுவர் - சிறுமியினர் டவுசர் அணியத் தடை... பாஜக ஆளும் உ.பி. கிராமத்தின் உத்தரவால் ஷாக்! - பின்னணி என்ன?
-
பொருநையை தொடர்ந்து தஞ்சையில் மாபெரும் சோழ அருங்காட்சியகம் : டெண்டர் வெளியிட்டது தமிழ்நாடு அரசு!
-
“நயினார் நாகேந்திரனின் எண்ணம் தமிழ்நாட்டில் எடுபடாது” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி !