Sports
"மான்செஸ்டர் யுனைடட் கிளப்பில் விளையாடியது மோசமான அனுபவம்" -கடந்த காலம் குறித்து மனம் திறந்த ரொனால்டோ !
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்து முடிந்த கால்பந்து உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை கைப்பற்றியது.ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக மெஸ்ஸியின் கடுமையான போட்டியாளராக இருந்த நட்சத்திர வீரர் போர்த்துக்கல் அணி இந்த உலகக்கோப்பையின் காலிறுதியில் மொரோக்கோ அணியிடம் தோல்வியைத் தழுவி வெளியேறியது. அந்த போட்டியில் ரொனால்டோ கண்ணீரோடு வெளியேறியது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து ரொனால்டோவை சவுதி அரேபியா கால்பந்து கிளப்பான அல் நாசர் அணி ஆண்டுக்கு சுமார் 1,700 கோடி ரூபாய் என்ற மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்தது. ரொனால்டோவின் அந்த ஒப்பந்தம் 2025- ஆம் ஆண்டு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அல் நாசர் அணியில் இணையும் முன்னர் ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அப்போது அவருக்கும் அணியின் பயிற்சியாளரருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. முக்கிய போட்டிகளில் ரொனால்டோ வெளியே அமரவைக்கப்பட்டார்.
அப்போது எவர்ட்டன் அணிக்கு எதிரான போட்டியின் போது அவரோடு புகைப்படம் எடுக்கவந்த ஆட்டிசம் குறைபாடு கொண்டு சிறுவன் ஒருவரின் கைப்பேசியை ரொனால்டோ தட்டி விட்டதால் இங்கிலாந்து கால்பந்து சம்மேளனத்தால் இரண்டு போட்டிகளில் ரொனால்டோ விளையாடக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்ததாக கூறப்பட்டது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக மான்செஸ்டர் யுனைடட் கிளப் பயிற்சியாளர் எரிக் டென் ஹாக் தன்னை மோசமாக நடத்தியதாகவும், அவர்மேல் எந்தவிதமான மரியாதையும் இல்லை என்றும் காட்டமாக கூறியிருந்தார்.
இந்த விவகாரம் பெரிதான நிலையில், ரொனால்டோவை அவரின் சம்மதத்தோடு வெளியேற்றுவதாகவும், அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது. அதன் பின்னரே அவர் அல் நாசர் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், " மான்செஸ்டர் யுனைடட் உடனான தொழில்முறை வாழ்க்கையில் நான் சில மோசமான நேரத்தை கடந்து வந்திருக்கிறேன். அதை சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கெல்லாம் வருத்தப்படுவதற்கு எனக்கு நேரமில்லை. அது என் வளர்ச்சியின் ஒரு பகுதி. அது கடந்துவிட்டது அவ்வளவு தான்.
என் வாழ்க்கையில் இப்போது நான் அனைத்திற்கும் மிகவும் தயாராக இருக்கிறேன், கற்றுக்கொள்வது என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த சில மாதங்களாக நான் எதைப்பற்றியும் சிந்திக்கவில்லை. கீழே இருக்கும் அந்த பிரச்சனையையும் நான் பார்க்கவில்லை. மான்செஸ்டர் யுனைடட் கிளப்பிலிருந்து வெளியேறிய பிறகு இப்போது நான் ஒரு சிறந்த மனிதனாக மாறியிருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் : 35.5 லட்சம் பேரை நீக்க தேர்தல் ஆணையம் முடிவு!
-
தேர்தல் ஆணையத்தை கொண்டு மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும் பா.ஜ.க : முரசொலி கண்டனம்!
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!