Sports
"இப்போதும் சிறந்த வீரர்தான்".. கே.எல்.ராகுலுக்கு ஆதரவு கொடுக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராகத் திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தைச் சேர்ந்த இவர் உள்நாட்டுத் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காகக் காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
தற்போது நடைபெற்றுவரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட தொடக்க வீரராக கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் முதல் டெஸ்ட் போட்டியில், 20, ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் 17,1 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த மோசமான ஆட்டத்தால் இவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த டெஸ்ட் போட்டிக்கான துணை கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
அதோடு கே.எல்.ராகுல் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடி அங்கு ரன்கள் குவித்து அணிக்குத் திரும்பவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் விமர்சித்துள்ளார். இப்படி முன்னாள் வீரர்களும், இவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இப்போதும் கே.எல்.ராகுல் சிறந்த வீரர்தான் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஆதரவு தெரிவித்துப் பேசியுள்ளார்.
இது குறித்துக் கூறியுள்ள கவுதம் கம்பீர், "இந்திய அணியிலிருந்து கே.எல்.ராகுலை நீக்கக் கூடாது. ஒவ்வொரு வீரருக்கும் தங்கள் வாழ்க்கையில் சில இடங்களில் ரன்கள் சேர்க்கத் தடுமாறுவார்கள். ரோகித் சர்மாவையே எடுத்துக் கொள்ளுங்கள். ஆரம்பத்தில் அவர் எப்படி விளையாடினார். இப்போது அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். இப்போதும் ராகுல் சிறந்த வீரர்தான். அவர் ரன் சேர்த்துள்ளதை நாம் பார்க்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
RCB அணியை வாங்கியது இவர்களா? மிகப்பெரிய தொகைக்கு கைமாற்றம்.. அணியில் மாற்றம் நிகழுமா! - முழு விவரம்!
-
“175 இடங்களில் உதயசூரியன்; 234 தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலின்தான் வேட்பாளர்!”: முதல்வர் மு.க.ஸ்டாலின் மடல்!
-
“சிலிண்டர் வழங்குவது மாநில அரசின் கையிலா இருக்கிறது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“பழனிசாமி மகா பொய்யர் என்பதை சாத்தான்குளம் வழக்கு மெய்ப்பித்துள்ளது!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
நிபந்தயற்ற ஆதரவு! : “உண்மையில் தியாகம்தான்.. வரலாறு பாராட்டும்...” - கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் பாராட்டு!