Sports
குடிபோதையில் மனைவி மீது தாக்குதல்.. சர்ச்சையில் சிக்கிய முன்னாள் இந்திய வீரர்.. போலிஸார் வழக்குப்பதிவு!
இந்திய அணிக்காக 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டெஸ்ட் போட்டிகளை விளையாடியவர் வினோத் காம்பிளி. இவரும் சச்சின் டெண்டுல்கரும் ஒன்றாகவே பள்ளி காலத்தில் கிரிக்கெட் விளையாட தொடங்கினர். அந்த காலத்தில் இருவர் சேர்ந்து அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற சாதனையையும் படைத்தனர்.
சச்சினை தொடர்ந்து வினோத் காம்பிளி இந்திய அணிக்காக களமிறங்கியபோது அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் ஜொலித்தவர் பின்னர் தடுமாறத்தொடங்கினார். அதோடு அவருக்கு அதிர்ஸ்டமும் இருக்கவில்லை. இதனால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த வினோத் காம்பிளி சில அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். ஆனால் அங்கும் போதிய வாய்ப்பின்றி தடுமாறினார். இதில் கொரோனா ஊரடங்கு அவரை கடுமையாகப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் "ஓய்வுக்கு பிறகு பிசிசிஐ பென்சனை மட்டுமே நம்பி இருக்கிறேன், எனக்கு வருமானம் கொடுக்கும் பிசிசிஐ-க்கு நான் நன்றி கடன் பட்டுளேன். அந்த வருமானம்தான் எனது குடும்பத்தை காத்து வருகிறது. எனது வருமானத்துக்கு மும்பை கிரிக்கெட் கூட்டமைப்பு தனக்கு ஏதாவது பணி வாய்ப்புகள் வழங்கவேண்டும்" என்று வினோத் காம்பிளி கூறியிருந்தார்.
இந்த செய்தி வைரலாக நிலையில், வினோத் காம்பிளிக்கு 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்க மும்பை தொழிலதிபர் ஒருவர் முன்வந்தார். இந்த நிலையில், தற்போது வினோத் காம்பிளி குடிபோதையில் மனைவியின் தலையில் மையல் பாத்திரத்தின் கைப்பிடியை வீசியதாக மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இது தொடர்பாக வினோத் காம்ப்ளியின் மனைவி ஆண்ட்ரியா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மும்பையின் பாந்த்ரா பகுதியில் நாங்கள் இருக்கும் வீட்டில் குடிபோதையில் இருந்த வினோத் காம்ப்ளி சமையல் பாத்திரத்தின் கைப்பிடியை தன் மீது வீசியதாகவும், இதில் தலையில் கடுமையாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த புகாரின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ள போலிஸார் இந்திய தண்டனைச் சட்டத்தின் 324 (அபாயகரமான ஆயுதங்களால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) மற்றும் 504 (அமைதியை மீறும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதிப்பு) ஆகியவற்றின் கீழ் வினோத் காம்ப்ளிக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!