Sports
இறுதிப்போட்டியில் தோல்வி.. முடிவுக்கு வந்த சானியா மிர்சாவின் கிராண்ட்ஸ்லாம் பயணம்.. கண்ணீர் பேட்டி !
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா இணை பிரேசில் இணையிடம் தோல்வியடைந்து 2ஆம் இடம் பிடித்தது. கிராண்ட்ஸ்லாம் வென்று வரலாற்று சாதனையுடன் சானியா மிர்சா தனது டென்னிஸ் கேரியரை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாகவும் இருந்தது. இதையடுத்து, போட்டிக்கு பிறகு கண்ணீருடன் சானியா மிர்சா தன் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
தன்னுடைய கிராண்ட்ஸ்லாம் பயணம் மெல்போர்ன் மைதானத்தில் தொடங்கியதாக உணர்ச்சிப்பூர்வமாக கூறிய சானியா, இந்த தருணத்தில் ஆனந்த கண்ணீருடன் மகிழ்வாக இருப்பதாகவும், அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவேன் எனவும் கூறியுள்ளார்.
மேலும், ரோகன் போபண்ணா குறித்து பேசியுள்ள சானியா, போபண்ணா தன்னுடைய முதல் கலப்பு இரட்டையர் இணை என்றும், 14வயதில் தேசிய பட்டத்துடன் அவருடன் தொடங்கிய பயணம், 22 ஆண்டுகள் தொடர்வதாக இந்த தருணத்தில் நினைவூட்டியுள்ளார்.தன்னுடைய சிறந்த நண்பர் என்றும், போட்டி களத்தில் தன்னுடைய சிறந்த இணையாக போபன்ணா விளையாடியுள்ளார் எனவும் அவருடனான கள நினைவுகளை பகிர்ந்துள்ளார்.
2005ல் மெல்போர்னில் தனது டென்னிஸ் பயணத்தை தொடங்கிய சானியா மிர்சா, 2023ல் அதே மெல்போர்னில் கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்துள்ளார். இந்தியாவிலிருந்து டென்னிஸ் களத்தில் தனிப்பெரும் அடையாளமாக உருவெடுத்துள்ள சானியா மிர்சாவின் இந்த சாதனைக்கு, ரசிகர்கள் ட்விட்டர் மூலம் அவருக்கு உணர்வுப்பூர்வமாக வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர்.
டென்னிஸில் பல சாதனைகள் படைத்துள்ள சானியா மிர்சா, ஆஸ்திரேலிய ஓபன்,பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஓபன், அமெரிக்க ஓபன் என 4 கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார். மேலும், தனிநபர் பிரிவில் உலகளவில் டாப் 30 இடத்துக்குள் வந்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் சானியா மிர்சா பெற்றுள்ளார். அதோடு இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனையாகவும் சில ஆண்டுகள் வலம்வந்துள்ளார். தற்போது கிராண்ட்ஸ்லாம் பயணத்தை நிறைவு செய்துள்ள சானியா மிர்சா, துபாயில் நடைபெறவுள்ள டபிள்யூ டி ஏ தொடர் மூலம் தனது டென்னிஸ் பயணத்தை நிறைவு செய்யவுள்ளார்.
Also Read
-
கனவுகள் கொண்ட இளைஞர்களுக்கு... “என் கனவு என் எதிர்காலம்” என்ற புதிய இணையதளம் தொடக்கம்!
-
திராவிட மாடலில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் 10,000 முகாம்கள் நடத்தி சாதனை! - முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டிற்கு 11 ஆண்டுகளாக சிறப்புத் திட்டங்களை அறிவிக்காமல் பாஜக வஞ்சிக்கிறது!” : முதலமைச்சர் உரை!
-
விழுப்புரம் மக்களுக்காக... ரூ.688.48 கோடியில் நலத்திட்ட உதவிகள்... அசத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ராகுல் காந்தி எழுப்பும் கேள்விகளைக் கண்டு பா.ஜ.க அரசு ஏன் அஞ்சுகிறது? : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!