Sports
இவரைப் போன்ற வீரர் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார் -இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய கபில் தேவ்!
சமீப காலமாக இந்திய அணியின் தவிர்க்கமுடியாத வீரராக முன்னேறியுள்ளார் சூரியகுமார் யாதவ். இந்தியாவின் 360 டிகிரி, இந்தியாவின் ஏபி டிவிலியர்ஸ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். இந்திய அணியின் முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் திகழ்ந்து வருகிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து தற்போது முடிந்த இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்றாவது போட்டியிலும் சூரியகுமார் யாதவ் ருத்ரதாண்டவம் ஆடினார். 51 பந்துகளின் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்கள் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தார். அவரின் அதிரடி காரணமாக அந்த போட்டியில் இந்திய அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் டி20 போட்டியில் தனது 3-வது சதத்தை அவர் நிறைவு செய்துள்ளார். மேலும், இந்தியாவில் தனது முதல் சதத்தையும் சூரியகுமார் யாதவ் விளாசியுள்ளார். ரோஹித் சர்மா மொத்தம் 4 சதங்களோடு முதல் இடத்தில இருக்கும் நிலையில் சூரியகுமார் தற்போது 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் சூரியகுமார் போன்ற வீரர் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார் என புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”சூரியகுமார் ஆட்டத்தை பார்த்த பிறகு எனக்கு சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரது வரிசையில் இடம் பிடிக்கும் திறமை படைத்தவர் சூரியகுமார் யாதவ்.
நான் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர் விராட் கோலி, ரிக்கி பாண்டிங், டி வில்லியர்ஸ் ஆகியோரது பேட்டிங் பார்த்துள்ளேன். வெகு சிலர் தான் துல்லியமாக பந்தை நினைத்த திசையில் அடிப்பார்கள். அதில் சூரியகுமாரும் ஒருவர். இப்படிப்பட்ட வீரர் நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே கிடைப்பார்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
சென்னையில் Rockwell Automation நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!
-
பாஜக முன்னாள் முதலமைச்சர் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பு : விவசாயிகள் போராட்டத்தால் பிரச்சாரம் ரத்து !
-
வாக்குப்பதிவு சதவீதம் திடீரென 6 % உயர்ந்தது எப்படி ? - தேர்தல் ஆணையத்துக்கு எதிர்க்கட்சிகள் கேள்வி !
-
”தொழிலாளர்களின் ஏணி திராவிட மாடல் அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மே தின வாழ்த்து!
-
T20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு : வாய்ப்பை பெற்ற, இழந்த வீரர்கள் யார் யார் ?