Sports
"இட ஒதுக்கீடு இருந்தால் தான் இந்திய அணி தேறும்".. கன்னட நடிகரின் கோரிக்கையால் பரபரப்பு!
ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி நிச்சயம் கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோசமாகத் தோல்வியடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. இந்த தொடரிலும் சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் இடம் பெறாதது சர்ச்சையானது. இந்த தொடரை அடுத்து வங்கதேச தொடரிலும் இவர்கள் இருவர் இடம் பெறவில்லை.
இதனால் பிசிசிஐ-ஐ பலர் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் #CASTEIST_BCCI வைரலாக்கினர். இதையடுத்து தற்போது வங்கதேசத் தொடரிலும் இந்திய அணி படுதோல்வியை அடைந்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணையில் இடஒதுக்கீடு அமல்படுத்த வேண்டும் என கன்னட நடிகர் சேத்தன் குமார் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையில், "கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இருப்பது போன்று கிரிக்கெட்டிலும் இட ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும்.
அப்போதுதான் பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்திய அணியில் தேர்வுசெய்யப்பட்டால் அவர்களது ஆட்டம் சிறப்பாக இருக்கும். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்ட பிறகே கறுப்பின வீரர்கள் அதிகம் இடம் பெற்று வருகின்றனர்" என தெரிவித்துள்ளார். பரவலாக இந்திய அணியில் சாதிய பாகுபாடு காட்டப்பட்டு வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில் தற்போது நடிகர்களே வெளிப்படையாக பேசி வருவது பிசிசிஐ-க்கு நெறுக்கடியை கொடுத்துள்ளது.
Also Read
-
சென்னை மெட்ரோ ரயில் Phase II : அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
வேளாங்கண்ணி TO இலங்கை... ரூ.6 கோடி மதிப்பிலான போதைப்பொருள்.. இந்து மக்கள் கட்சி நிர்வாகி கைது!
-
“ரூ.86.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடற்றோருக்கான இரவுநேர காப்பகம் திறப்பு!” : முழு விவரம் உள்ளே!
-
‘இந்தி எதிர்ப்புப் போராட்டம் – முழுமையான அரசு ஆவணங்கள்’ நூல் வெளியீடு! : முழு விவரம் உள்ளே!
-
“தமிழ்நாட்டின் வளர்ச்சியே முதன்மையானது” : தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கனிமொழி எம்.பி பேட்டி!