Sports
இனி நீங்க தேவையில்லை.. Manchester United அணியிலிருந்து வெளியேற்றப்பட்ட ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!
கத்தாரில் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரராக இருக்கும் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையில் போர்ச்சுக்கல் அணி இந்த உலகக் கோப்பையை விளையாடுகிறது. இந்நிலையில் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியிலிருந்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ வெளியேற்றி இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு அடுத்த பெரிய தொடராகத் கருதப்படுவது கிளப் போட்டிகள்தான். இந்த கிளப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் உலகம் அந்த வீரரை அறிந்து கொள்ளும். அதனாலேயே கால்பந்து உலகத்திற்குள் நுழையும் எந்த ஒரு வீரரும் ஏதாவது ஒரு கிளப் அணியில் இடம் பெற வேண்டும் என ஆசைப்படுவார்கள்.
மெஸ்ஸி, நெய்மர், ரெனால்டோ போன்ற வீரர்களை உலகத்திற்கு அடையாளம் காட்டியதும் இந்த கிளப் போட்டிகள்தான். கால்பந்து உலகின் மிகச்சிறந்த ஃபார்வேடுகளுள் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ யுவன்டஸ் அணியிலிருந்து வெளியேறி 2009ம் ஆண்டும் மீண்டும் பழைய அணியான மான்செஸ்டர் யுனைடடுடன் இணைந்தார். இதிலிருந்தே ரொனால்டோ மற்றும் அணி நிர்வாகத்திற்கு அடையே சின்ன சின்ன மோதல் போக்குகள் இருந்து வந்துள்ளன.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பிரீமியர் லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இடம் பெற்றும் போட்டிகளில் விளையாடாமல் இருந்தார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில் போட்டி ஒன்றில் இது குறித்துப் பேசும் போது மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகத்தை விமர்சித்து பேசியுள்ளார். மேலும் அணியின் பயிற்சியாளரையும் சாடினார்.
இந்த பேட்டியை அடுத்தே அதிரடியாக மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து கிறிஸ்டியானோ ரொனால்போட வெளியேறியுள்ளார். இது குறித்துப் பேசிய ரொனால்போட, "மான்செஸ்டர் உடனான விரிசல் போர்ச்சுக்கல் அணியைப் பாதிக்காது.
எனது மகள் உடல்நிலை சரியில்லாததால் நான் கடந்த சீசனில் பங்கேற்க முடியாது என கூறி பிறகும் டென் ஹாக் என்னை சந்தேகித்தார். அணி வீரர்களின் குடும்பத்தைப் பற்றி மான்செஸ்டர் யுனைடெடு நிர்வாகம் கவலைப்படுவதில்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த பேட்டியை அடுத்து மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து கிறிஸ்டியானோ ரொனால்போட வெளியேற்றப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைடெடு அணிக்காக கிறிஸ்டியானோ ரெனால்டோ 346 போட்டிகள் விளையாடு 145 கோல்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!
-
“பனையூர் பங்களா முன் கூடும் கூட்டம்.. இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க என்ற நிலை”: அப்பாவு விமர்சனம்!
-
அரசுப் பள்ளியில் ஆபாசப் பாடலுக்கு ஆட்டம் போட்ட அமைச்சர் விஸ்வநாதன் : காணொளி வெளியாகி சர்ச்சை!