Sports
"இந்த இந்திய வீரரின் ஆட்டத்தை அடக்கியே தீருவோம்" - இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சூளுரை !
ஆஸ்திரேலியாவில் 8வது டி20 உலகக் கோப்பை அக்டோபர் 16ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர் 12 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், குரூப் 1-ல் இருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதேபோல குரூப் 2-ல் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
அரையிறுதியில் இந்தியா -இங்கிலாந்து, பாகிஸ்தான் -நியூஸிலாந்து மோதவுள்ளன. இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி சூரியகுமாரை நம்பியே களமிறங்கியது என்று சொல்லும் அளவு சிறப்பாக ஆடி வருகிறார். அவரும் விராட் கோலியும் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து வருகிறார்கள். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்திலும், சூரியகுமார் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.
இதன் காரணமாக விராட் கோலியின் மீதும் சூரியகுமாரின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நெதர்லாந்துக்கு எதிராக 25 பந்துகளில் 51 ரன்கள், தென்னாபிரிக்காவுக்கு எதிராக 40 பந்துகளில் 68 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 25 பந்துகளில் 61 ரன்கள் என குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் குவிக்கும் சூரியகுமார் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி வரும் 10ம் தேதி மதியம் 1.30 மணிக்கு அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் நிலையில், சூரியகுமார் குறித்து இங்கிலாந்து அதிரடி ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர், "இந்த தொடரில் சூரியகுமார் அதிரடியாக ஆடிவருகிறார். அவருக்கு எதிரான திட்டங்கள் வகுத்துள்ளோம். இதனை வைத்து பிரமாதமாக ஆடி வரும் சூர்யகுமாரின் ஆட்டத்தை அடக்குவோம். ரோகித் சர்மா இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். அவர் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை என்பதால் குறைத்து மதிப்பிட முடியாது" என அவர் கூறியுள்ளார்.
Also Read
-
பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் !
-
"பாஜகவால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது" - அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா பேட்டியால் சலசலப்பு !
-
அங்கன்வாடி மையங்கள் மூடலா? மீண்டும் போலி செய்தி வெளியிட்ட தினமலர்.. உண்மை என்ன? - விவரம் உள்ளே!
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!