Sports
"இப்படியே ஆடினால் அணியை விட்டு தூக்கிவிடுவார்கள்"- இந்திய அணியின் முக்கிய வீரரை எச்சரித்த கவாஸ்கர் !
துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். எனினும் பின்னர் ஆடிய வீரர்கள் அபாரமாக ஆடியதால் அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. பின்னர் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துவக்க வீரர் கே.எல்.ராகுல் டி20-யில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடினார்.
அந்த போட்டியில் சூரியகுமார் யாதவின் ஆட்டத்தால் இந்திய அணி பெரிய இலக்கை எட்டி ஹாங்காங் அணியை வீழ்த்தியது. இந்த இரு போட்டியில் கே.எல்.ராகுல் ஆடிய இன்னிங்ஸ் பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கே.எல்.ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், "டி.20 உலகக்கோப்பை தொடரில் சிறந்த பார்மில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். சுப்மன் கில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுடனான தொடரில் மிக சிறப்பாக விளையாடினார், எனவே துவக்க வீரர்களுக்கு இந்திய அணியில் கடும் போட்டி நிலவுகிறது.
எனவே கே.எல் ராகுல் தொடர்ந்து சொதப்பினால் நிச்சயம் அவர் இந்திய அணியில் இருந்து விரைவாக நீக்கப்படுவார், இது போன்றே விளையாடினால் இன்னும் 2-3 போட்டிகளில் மட்டுமே இந்திய அணியும் கே.எல் ராகுலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், அதிலும் சொதப்பினால் நிச்சயமாக அவர் அணியில் இருந்து நீக்கப்படுவார்' என்று தெரிவித்துள்ளார்.
Also Read
-
“ஏ.. எடு.. எடு..” -சேலம் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் மாமூல்.. அட்ராசிட்டியில் ஈடுபடும் தவெக நிர்வாகி!
-
திருவள்ளூர் அம்மோனியா வாயுக் கசிவு : 2 பேர் பலி... 50-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை - விவரம்!
-
“11 பந்துகளில் அரைசதம்.. முதல் தர கிரிக்கெட்டில் அசத்திய சூர்யவன்ஷி.. அசந்துபோன இலங்கை வீரர்கள்!”
-
“கல்விக்கூடத்தை அரசியல் வியாபரக் களமாக மாற்றினால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்”-திமுக ஐடி விங் எச்சரிக்கை!
-
காவிமயமாகும் கல்வி; உயிரை காவுகேட்கும் நீட்தேர்வு - திமுக மாணவரணி சார்பில் ஜூன் 23-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!