Sports
ரத்துசெய்யப்படுகிறதா வெஸ்ட்இன்டீஸ்க்கு எதிரான கடைசி இரு போட்டிகள் ? - இந்திய அணிக்கு புதிய பிரச்சனை !
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வெஸ்ட்இன்டீஸ் சென்றுள்ளது. அங்கு ஷிகர் தவானின் தலைமையில் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற இந்திய அணி, அந்த ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் தொடர் நாயகன் விருது வென்றார்.
அதைத் தொடர்ந்து அந்த அணியுடன் ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
பின்னர் மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இன்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகம் விருது வென்றார்.
இதன் பின்னர் கடைசி இரு போட்டிகளும் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மகாணத்தின் சென்ட்ரல் ப்ரோவார்டு ரிஜினல் பார்க் மைதானத்தில், ஆகஸ்ட் 6, 7 ஆம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், இந்த போட்டி நடைபெறுவதில் தற்போது சிக்கன் ஏற்பட்டுள்ளது. வெஸ்ட்இன்டீஸ் மற்றும் இந்தியா ஆகிய இரு அணியின் வீரர்களுக்கும் அமெரிக்கா விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் அமெரிக்காவின் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வெஸ்ட்இன்டீஸ் கிரிக்கெட் நிர்வாகம் தரப்பில் கூறும்பொழுது “வெஸ்ட்இன்டீசில் அந்த இரண்டு ஆட்டங்களை நடத்துவது சாத்தியமில்லை. அதனால் விசா சிக்கலைத் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் நிலுவையில் உள்ள விசாக்களைப் பெறவும், வேறு விருப்பங்களும் ஆராயப்படுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!