Sports
#Olympics - இந்தியாவுக்கு 3வது பதக்கம்.. குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் வென்றார் வீராங்கனை லவ்லினா!
69 கிலோ எடைப்பிரிவான வெல்டர் வெயிட் பிரிவில் இந்தியா சார்பில் டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தேர்வாகியிருந்தார் லவ்லினா. முதல் சுற்றில் இவர் எதிர்த்து ஆட வேண்டிய வீராங்கனை ஒலிம்பிக்கிலிருந்து விலகியதால் நேரடியாக அடுத்த சுற்றுக்கு தகுதிப்பெறும் வகையில் பை (bye) வழங்கப்பட்டது.
காலிறுதிக்கு முந்தைய அந்த சுற்றில் ஜெர்மானிய வீராங்கனையான நதீம் அபெட்சை எதிர்கொண்டார் லவ்லினா. இந்த போட்டியில் மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா நதீம் அபெட்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். காலிறுதி போட்டியை வென்று அரையிறுதிக்கு முன்னேறிவிட்டாலே பதக்கம் உறுதி என்ற நிலையில், பலத்த எதிர்பார்ப்புடன் காலிறுதி போட்டி தொடங்கியது.
காலிறுதி போட்டியில் சீன தைபே வீராங்கனையான நியன் ஜின் ஜேனை எதிர்கொண்டார் லவ்லினா. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையிலேயே மிகச்சிறப்பாக ஆடிய லவ்லினா ஜின் ஜேனை வீழ்த்தி அரையிறுதியில் கால்பதித்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அரையிறுதி பேட்டியில், லல்லினா போர்கோஹெய்னுக்கும் துருக்கி வீராங்கனைக்குமான ஆட்டம் தொடங்கியது.. அதிரடியாக அடி, துருக்கி வீராங்கனை வெற்றிபெற்றார். ஐந்து நடுவர்களின் தீர்ப்புப்படி துருக்கி வீராங்கனை 30 புள்ளிகளும், லவ்லினா 25 புள்ளிகளும் பெற்றனர். இதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார் லவ்லினா.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!