Sports
இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் 2 பேருக்கு கொரோனா தொற்று : ரிஷப் பண்ட் காரணமா?
இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு இங்கிலாந்து சென்றுள்ளனர்.
பின்னர், இந்திய வீரர்களை தனிமைப்படுத்தப்பட்டனர். தற்போது இங்கிலாந்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவுவதால் இந்திய வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. இதையடுத்து அந்த இரண்டு வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களையும் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.
மேலும் கொரோனா தொற்று எந்த இந்திய வீரருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. இரண்டு பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் ரிஷப் பண்ட் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் தனிமையில் இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மீண்டும் ரிஷ்ப் பண்டுக்கு வரும் ஞாயிறு கொரோனா சோதனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.
வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறுமா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!
-
தேசிய நெடுஞ்சாலைகளில் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்கள் : திமுக MP ராஜேஷ்குமார் வலியுறுத்தல்!
-
”அனல் மின் நிலையங்களுக்கு உரிய நிலக்கரி ஒதுக்கீடு வேண்டும்” : தமிழச்சி தங்கபாண்டியன் MP வலியுறுத்தல்!
-
“அரசமைப்பு திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல; சர்வாதிகாரத்தின் தொடக்கம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!