Sports
“தோனி ஏற்காவிட்டாலும் அவருக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த தயார்” - பிசிசிஐ மூத்த அதிகாரி தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது அவரது ரசிகர்களிடையேவும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களிடையேவும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனியை சிறப்பித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் பெருமளவில் வைரலாக்கப்பட்டன.
மேலும் இத்தனை சிறப்புகளையும் பெற்றுத் தந்த தோனிக்கு பிரியாவிடையாக ஒரு ஃபேர்வெல் போட்டி நடத்தவும் ரசிகர்களும் கிரிக்கெட் வீரரகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐயின் மூத்த அதிகாரி யாரும் எதிர்பாராத நேரத்தில் தோனி தனது ஓய்வை அறிவித்துவிட்டார். இப்போதைக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஏதும் இந்திய அணிக்கி இல்லை.
ஆனால், ஐபிஎல் முடிந்த பிறகு தோனிக்கான உரிய கவுரவம் கட்டாயம் அளிக்கப்பட வேண்டும். அவருக்கு ஃபேர்வெல் போட்டி ஒன்று நடத்தப்பட வேண்டும். அவர் ஏற்கவே இல்லையென்றாலும் முறைப்படி மரியாதை வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.
Also Read
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சிந்து சமவெளி நாகரிகத்தை திரிக்கும் மதவெறி அமைப்பு : செந்தலை ந.கவுதமன் கண்டனம்!