Sports
''மாற்று அணிகளில் இருந்து வீரர்களை தட்டிப்பறித்த மும்பை இந்தியன்ஸ் அணி” - புதிய யுக்தி பலன் தருமா?
ஐ.பி.எல் தொடரின் அடுத்த சீசனை முன்னிட்டு வீரா்களின் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐ.பி.எல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை மாற்றியும், அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களையும் விடுவித்துள்ளது.
பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியிலிருந்து ட்ரென்ட் போல்டையும், ராஜஸ்தான் அணியிலிருந்து தவல் குல்கர்னியையும் வாங்கியுள்ளது. மேலும், யுவராஜ் சிங், எவின் லெவிஸ், பெரெண்டர்ஃப், பென் கட்டிங் உள்ளிட்ட பத்து வீரர்களை விடுவித்துள்ளது.
இந்நிலையில், அணியில் ட்ரென்ட் போல்டை அணியில் இணைந்தது குறித்து அந்த அணியின் இயக்குநர் ஜாகீர்கான் கூறுகையில், இந்த ஆண்டு எங்களுக்கு வித்தியாசமான ஒன்று. காயம் காரணமாக எங்களுக்கு சில சவால்கள் ஏற்பட்டுள்ளன.
ஹர்டிக் பாண்டியா, பும்ரா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டுள்ளனர். இதனால், வேகபந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொன்டே ட்ரெண்ட் போல்ட் மற்றும் தவல் குல்கர்னியைத் தேர்வு செய்தோம் என கூறியுள்ளார்.
முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதேபோல பும்ராவுக்கு கழுத்தின் கீழ்பகுதியில் முறிவுக்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
Also Read
-
குதிரை பேரம் : முதலமைச்சர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்!
-
VB-G RAM G திட்டத்தை அமல்படுத்த த.வெ.க அரசு துடிப்பது ஏன்? : தி.மு.க ஐடி விங் கேள்வி!
-
குதிரை பேரம் ; அத்தனை அசிங்கத்துக்கும் வைகோ ஒப்புதல் வாக்குமூலம் : ஆதாரங்களுடன் உண்மை சொன்ன முரசொலி!
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!