Sports
“தோனி, கங்குலி போன்றோரால் முடியாததைச் செய்கிறார் கோலி” - கம்பீர் பாராட்டு!
புனேவில் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. மேலும் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதையடுத்து இந்திய அணியினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், கேப்டன் கோலியை முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.
போட்டி முடிந்த பிறகு இதுகுறித்துப் பேசிய கம்பீர், ''டெஸ்ட் ஆட்டத்தில் தோற்பதற்கு கோலி அஞ்சுவதில்லை. தோல்வியை கண்டு அஞ்சினால் உங்களால் வெற்றி பெறமுடியாது. தோல்வியை கண்டு கோலி ஒரு போதும் அஞ்சியதில்லை அதுதான் கோலியின் தனிப்பட்ட குணம்.
நாம் கங்குலி, தோனி, டிராவிட் பற்றிப் பேசுகிறோம். ஆனால் விராட் கோலி தலைமையில் இந்திய அணி தற்போது வெளிநாடுகளிலும் டெஸ்ட் தொடர்களை வெல்கிறது. இதர கேப்டன்கள் எடுக்காத துணிச்சலான முடிவுகளை அவர் எடுத்துள்ளார்.
மற்ற கேப்டன்கள் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருந்தால் தோல்வியடைய மாட்டோம் என எண்ணினார்கள். ஆனால் விராட் கோலி மட்டுமே வெளிநாடுகளில் ஐந்து பந்துவீச்சாளர்களைக் கொண்டு விளையாடினார்.
ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவை அணியில் சேர்த்துக்கொண்டார். தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் இந்திய அணி ஹர்டிக் பாண்டியா மற்றும் நான்கு பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ததால் அந்த டெஸ்டில் வென்றது எனத் தெரிவித்துள்ளார்.
கோலியை கம்பீர் புகழ்ந்ததைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் வியப்படைந்துள்ளனர். முன்னதாக தோனி மற்றும் ரோஹித் அணியில் இருப்பதால் தான் விராட் கோலி சிறந்த கேப்டனாக இருக்கிறார் என கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!