Sports
மனைவி கொடுத்த துன்புறுத்தல் புகார் - மே.இ தீவுகள் கிரிக்கெட் தொடரில் இருக்கும் ஷமி கைதாகிறாரா?
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான், ஷமி தம்மை வீட்டில் அடைத்து துன்புறுத்துவதாக மீது கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பான விசாரணை கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசரணைக்கு வந்தபோது வழக்கில் ஆஜராகாத முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது சமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய அணியுடன் சமி உள்ளார். அனைத்து போட்டிகளும் முடிந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சமி விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்யபடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!
-
“24 மணி நேரத்தில் 8 கொலைகள்.. தினமும் எகிறும் Crime Rate” : தவெக அரசுக்கு கனிமொழி எம்.பி கடும் கண்டனம்!
-
எழுச்சியுடன் நடந்த திமுக முப்பெரும் விழா.. விருதுகளை வழங்கி சிறப்பித்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Dummy முதலமைச்சரின் ஆட்சியில் காற்றில் பறக்கும் சட்டம் - ஒழுங்கு : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சாடல்!