Sports
மனைவி கொடுத்த துன்புறுத்தல் புகார் - மே.இ தீவுகள் கிரிக்கெட் தொடரில் இருக்கும் ஷமி கைதாகிறாரா?
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவரது மனைவி ஹசின் ஜகான், ஷமி தம்மை வீட்டில் அடைத்து துன்புறுத்துவதாக மீது கொல்கத்தா காவல்துறையில் புகார் அளித்தார்.
இந்த புகார் தொடர்பான விசாரணை கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இது தொடர்பாக முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி பலமுறை உத்தரவிட்ட போதும் இருவரும் ஆஜராகவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசரணைக்கு வந்தபோது வழக்கில் ஆஜராகாத முகமது ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமது இருவருக்கும் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் முகமது சமி மற்றும் அவரது சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளில் உள்ள இந்திய அணியுடன் சமி உள்ளார். அனைத்து போட்டிகளும் முடிந்த நிலையில், நாளை அல்லது நாளை மறுநாள் இந்திய அணி நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது சமி விமான நிலையத்தில் வைத்தே போலீசார் கைது செய்யபடலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Also Read
-
முதுகெலும்பு இல்லாத த.வெ.க அரசு : காவிரிக்காக பொங்கிய தி.மு.க - முரசொலி தலையங்கம்!
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!