Sports
தோனியின் சாதனையை 11 டெஸ்ட் போட்டிகளிலேயே முறியடித்த ரிஷப் பண்ட்!
இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இஷாந்த் சர்மா வீசிய பந்தில் பிராத்வெய்ட்டின் 'கேட்ச்சை பிடித்ததன் மூலம் விரைவாக 50 டிஸ்மிஸல்களை செய்த இந்திய வீரர் எனும் சாதனையை எட்டினார் ரிஷப் பண்ட்.
இதற்கு முன்னர், 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 50 'டிஸ்மிஸல்'களைச் செய்ததே இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது. ரிஷப் பண்ட் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 11வது டெஸ்ட் போட்டியில் விளையாடும்போதே தனது 50வது டிஸ்மிஸலை செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் 11 கேட்சுகளை பிடித்தார் ரிஷப் பண்ட். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிகமான கேட்சுகளைப் பிடித்த தென் ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், இங்கிலாந்தின் ஜேக் ரஸல் ஆகியோரின் சாதனையைச் சமன் செய்தார் ரிஷப் பண்ட்.
சமீபத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது T20 ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ரிஷப் பண்ட் 42 பந்துகளில் 65 ரன்கள் குவித்ததன்மூலம், விக்கெட் கீப்பர்களில் அதிகபட்சமாக 56 ரன்கள் அடித்திருந்த தோனியின் சாதனையை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
தோனி, அணியில் இடம்பிடிக்காத நிலையில், அவருக்கு சிறந்த பதிலியாகச் செயல்பட்டு வருகிறார் ரிஷப் பண்ட். குறைவான போட்டிகளில் மட்டுமே விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்து வரும் ரிஷப் பண்ட்டுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
Also Read
-
“ஒயிட் வாஷான ஆப்கானிஸ்தான்.. கடைசி ஆட்டத்தில் ரோகித், ஜெய்ஸ்வால் அதிரடி” - முழுத் தகவல் உள்ளே!
-
“CBSE பள்ளிகளுக்கு NOC சான்றிதழ்.. சட்டம் தெரியுமா? தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு கூறும் பொய்!”
-
உணவுக்குப் பதில் பிஸ்கட் : காலை உணவு திட்டத்தில் அலட்சியம் காட்டும் த.வெ.க அரசு!
-
“நான் முதல்வன் திட்டத்தை முடக்குவது இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயல்” : மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
பேரவை நேரலை இருட்டடிப்பு: “இதுவும் பாசிச நடவடிக்கையே” - சபாநாயகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடிதம்!